/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எங்க குழந்தைங்க படிக்கிறதே இருட்டு வீட்டுக்குள்ள தான்! பழங்குடியினரின் பரிதாபம்
எங்க குழந்தைங்க படிக்கிறதே இருட்டு வீட்டுக்குள்ள தான்! பழங்குடியினரின் பரிதாபம்
தொண்டாமுத்தூர் அருகே இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் பச்சான் வயல் பதி மற்றும் சவுக்குக்காடு பதி. இங்கு 22 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், பேருந்து போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஊராட்சிக்கு வெளியே உள்ள மலைக் கிராமங்களை, அருகில் உள்ள ஊராட்சிகளுடன் இணைத்தால், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கும் என்பதையும் அதிகாரிகள் புரிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கான காரணங்கள் குறித்து வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 15, 2025