வழி நெடுகிலும் தடபுடல் வரவேற்பு | Palani temple
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இருந்து ஆண்டுதோறும், தைப்பூசம் கொண்டாடும் வாரத்தில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த குழுவினர் பந்தலூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ்ஸிலும் கோவையிலிருந்து, ஈச்சனாரி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வழியாக பழநிக்கு நான்கு நாட்கள் பாதையாத்திரை செல்ல உள்ளனர். அதையொட்டி பந்தலூர் முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்த குழுவினர் இன்று காலை ஒருங்கிணைப்பாளர் சாமிவேல் தலைமையில் 80 பேர் பழனிக்கு புறப்பட்டனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தடபுடல் வரவேற்பு அளித்தனர்.
 ஜன 26, 2024