/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பஸ் நிறுத்தம் இருக்கு! ஆனா நிற்க நிழற்குடை இல்ல! அத மொதல்ல கட்டி தாங்க...
பஸ் நிறுத்தம் இருக்கு! ஆனா நிற்க நிழற்குடை இல்ல! அத மொதல்ல கட்டி தாங்க...
கோவை போத்தனுாரில் மூன்று இடங்களில் பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. ஆனால் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை இல்லை. வெயில், மழைக்காலங்களில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். மக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த இடங்களில் நிழற்குடை இல்லாதது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் மக்களின் அடிப்படை தேவையான பஸ் நிழற்குடை அமைத்து தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழற்குடை இல்லாமல் அவதிப்படும் பொது மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 19, 2025