/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ₹75 லட்சம் இழப்பு என விவசாயிகள் வேதனை | Coimbatore | Loss up to Rs.75 lakhs
₹75 லட்சம் இழப்பு என விவசாயிகள் வேதனை | Coimbatore | Loss up to Rs.75 lakhs
கோவை மாவட்டம் ஆனைமலை வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று வீசியதால் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடும் வறட்சி காரணமாக வாழைக்கு விலை கொடுத்து தண்ணீர் வாங்கி காப்பாற்றிய ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 75 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மே 10, 2024