பெங்களூர் டபுள் டக்கர் ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிக்க கோரிக்கை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவை வரும் டபுள் டெக்கர் ரயிலை பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கு நீட்டிக்குமாறு பயணிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எர்ணாகுளத்திலிருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் மெமு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது தவிர பொள்ளாச்சி ரயில் பயணிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 22, 2025