/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நாங்கள் ஊரை விட்டு போயிடுறோம்... குமுறும் மக்கள், தொடரும் அவலம்..
நாங்கள் ஊரை விட்டு போயிடுறோம்... குமுறும் மக்கள், தொடரும் அவலம்..
கோவை மாவட்டம், சத்தி சாலையில் கரியாம்பாளையம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையால் அருகில் உள்ள வீடுகளில் மஞ்சள் நிறத்தில் துகள்கள் படிக்கின்றன. துகள்கள் படியும் இடத்தில் துளை ஏற்படுகிறது. மேலும் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என கிராம மக்கள், கரியாம்பாளையம் ஊராட்சி, தாலுகா அலுவலகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 16, 2026