/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஊரு முழுவதும் சுத்தம் செய்யறோம்... ஆனா எங்க வாழ்க்கை சுத்தமா இல்ல
ஊரு முழுவதும் சுத்தம் செய்யறோம்... ஆனா எங்க வாழ்க்கை சுத்தமா இல்ல
கோவை உக்கடம் சி.எம்.சி., காலனியில் பாலம் கட்டுவதற்காக அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்ற உத்தரவாதத்தின்பேரில் அங்கிருந்தவர்களுக்கு புல்லுக்காட்டில் 390 குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஷெட்டுகள் அமைத்து அதில் குடியமர்த்தப்பட்டனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் மோசமாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஊருக்கே துாய்மை பணி மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்கள் படும் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 05, 2024