/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒரு கிலோ மீட்டருக்கு 5 கி.மீ சுத்துறோம்... மாற்று வழி கேட்கும் மக்கள்
ஒரு கிலோ மீட்டருக்கு 5 கி.மீ சுத்துறோம்... மாற்று வழி கேட்கும் மக்கள்
கோவை தண்ணீர்பந்தல் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டத் தொடங்கி பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் பாலம் கட்டுமான பணிகள் குறித்து முக்கிய சாலைகளில் அறிவிப்பு பலகைகள் வைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். ரயில்வே தண்டவாளம் வரை வந்து அதன்பின்னர் திரும்பி செல்கிறார்கள். இதனால் நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஆவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அறிவிப்பு பலகைகள் வைக்காததால் வாகன ஓட்டிகள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 03, 2025