உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அப்துல்கலாம் அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்பாடு | School Function

அப்துல்கலாம் அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்பாடு | School Function

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு  பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் நடைபெற்றன. பெண்ணுரிமை, தேசபக்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ஷீஜா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியை அறக்கட்டளை முதன்மை ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் ஒருங்கிணைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சேரங்கோடு ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ், சமூக ஆர்வலர் விஜயன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை