கல்வெட்டுக்கள் நிறைந்த 1,200 ஆண்டு பழமையான சிவன் கோவில்
கோவையை அடுத்த இடிகரையில் இரு ஆறுகள் செல்வதால் இரு கரை என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது இடிகரை என்று அழைக்கப்படுகிறது. ராமர் இங்கு வந்து வில் வைத்து வழிபட்டதால் இது வில்வேஸ்வர உடையார் என்று பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாட்டை ஆண்ட கரிகால சோழ மன்னன் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல் துறையினர் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். இந்த கோவிலின் பழமை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 26, 2024