சிங்காநல்லூர் ஏரியா... இல்லை குப்பை ஏரியா...
கோவையில் உள்ள சிங்காநல்லுார் ஏரி வாயிலாக முன்பு 800 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. ஆனால் தற்போது அது 400 ஏக்கராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சிங்காநல்லுார் ஏரி சரியாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் அதில் ஆகாய தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. ஆகாய தாமரைக்கு பதில் கண்ணுக்கு தெரியாத பாசி வளர்த்தால் மீன்களுக்கு உணவு கிடைக்கும். இதுபோன்று சிங்காநல்லுார் ஏரியை சீரமைப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 15, 2025