உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சரவணம்பட்டி விவேகம் பள்ளியில் நடைபெற்றது | sports | covai

கோவை சரவணம்பட்டி விவேகம் பள்ளியில் நடைபெற்றது | sports | covai

கோவை சரவணம்பட்டியில் உள்ள விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான இரண்டாம் ஆண்டு நாதன் நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. போட்டியை விகாஷ் வித்யாலயா பள்ளி தலைவர் ஆண்டவர் ராமசாமி, ரோட்டரி கிளப் நிர்வாகி ஜஸ்டின் பிரேம் குமார் துவக்கி வைத்தனர். விவேகம் பள்ளி முதல்வர் லில்லி பிரின்சி உடனிருந்தார். மாணவ, மாணவிகளுக்கு 11, 13, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. முதலாவதாக 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவில் 37 அணிகள் மற்றும் 13 வயது பிரிவில் 39 அணிகள் பங்கேற்றன. 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் விவேகம் பள்ளி அணி, இரண்டு கோல் வித்தியாசத்தில் லிஸ்யூ பள்ளியையும், சி.எஸ். அகாடமி அணி மூன்று கோல் வித்தியாசத்தில் தசரதன் சர்வதேச பள்ளியையும் வீழ்த்தியது. 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டில்லி பப்ளிக் பள்ளி அணி, மூன்று கோல் வித்தியாசத்தில் டாப்ஸ் பப்ளிக் பள்ளியையும், வேலம்மாள் பள்ளி அணி மூன்று கோல் வித்தியாசத்தில் டிரினிட்டி பள்ளி அணியையும் வீழ்த்தியது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ