உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காலிறுதிக்கு முந்தைய சுற்று துவக்கம் | sports | Kovai

காலிறுதிக்கு முந்தைய சுற்று துவக்கம் | sports | Kovai

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி கடந்த 7ம் தேதி முதல் நடக்கிறது. பள்ளி மாணவர்களை தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது. மூன்றாம் நாளான இன்று ஆண்கள் பிரிவில் தர்மபுரி அணி 66-47 என்ற புள்ளி கணக்கில் நீலகிரி அணியையும், கன்னியாகுமரி அணி 73-40 என்ற புள்ளி கணக்கில் நாமக்கல் அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து சேலம் அணி 70-30 என்ற புள்ளி கணக்கில் கடலுார் அணியையும், விழுப்புரம் அணி, 65-42 என்ற புள்ளி கணக்கில் ராமநாதபுரம் அணியையும் வென்றது. பெண்கள் பிரிவில் தேனி அணி 56-50 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணியை வென்றது. விருதுநகர் அணி 61-19 என்ற புள்ளி கணக்கில் திருவண்ணாமலை அணியையும், தென்காசி அணி 56-41 என்ற புள்ளி கணக்கில் பெரம்பலுார் அணியையும், நாமக்கல் அணி 78-39 என்ற புள்ளி கணக்கில் சிவகங்கை அணியையும் வென்றது. தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடக்கிறது.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை