/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நாடு முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | sports | Kovai
நாடு முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | sports | Kovai
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் கோவை கோல்ஃப் கிளப்புடன் இணைந்து சாரிட்டி கோப்பைக்கான கோல்ஃப் போட்டிகள் நடத்தியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இரண்டாவது சீசனாக கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 96 கோல்ஃப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
டிச 08, 2024