தி.மு.க., எம்.பி., கூறியது உண்மையா? கோவை மக்களின் கருத்து...
லோக்சபாவில் கடந்த 2ந்தேதி பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க., எம்.பி. கனிமொழி பங்கேற்று பேசினார். அப்போது ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது, என, மத்திய அரசை விமர்சித்து பேசினார். இது பற்றி கோவை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் பயணிகளிடம் ரயில் டிக்கெட் வாங்குவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? மொழி சம்பந்தமாக டிக்கெட் வாங்குவதில் ஏதும் தயக்கம் இருந்ததா? என கேட்டதற்கு மக்கள் கூறிய கருத்துகளை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 04, 2024