/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ முருங்கை மரத்தடியில் சுயம்பாக தோன்றிய சிவன்... ஆயிரம் ஆண்டு அதிசயம்
முருங்கை மரத்தடியில் சுயம்பாக தோன்றிய சிவன்... ஆயிரம் ஆண்டு அதிசயம்
கோவையை அடுத்த வடமதுரையில் விருந்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல சிறப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சுவாமியும், அம்பாளும் முருங்கை கீரையில் விருந்து படைத்ததால் விருந்தீஸ்வரர் சுவாமி ஆனதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோவிலில் உள்ள சுரங்கப்பாதை 3 கிலோ மீட்டர் துாரத்தில் இடிகரை வில்லீஸ்வர சுவாமி கோவிலில் முடிவடைகிறது. இதன் வாயிலாக இங்கு மன்னர்கள் ஆட்சி நடந்துள்ளது தெளிவாகிறது. இப்படி புகழ்பெற்ற விருந்தீஸ்வரர் சுவாமி கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 25, 2024