குப்பையை கொண்டு வாருங்கள்... பரிசை பெற்றுச் செல்லுங்கள்
மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொது இடங்களில் வீசாமல் அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கோவையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது, இதற்காக பள்ளி மாணவர்களிடம் ஒரு பை கொடுத்து அதில் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் மக்காத பொருட்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை ஆர்வத்துடன் கொண்டு வந்து கொடுத்தனர். அப்படி கொடுத்த மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் கொடுக்கப்பட்டன. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 07, 2026