/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் பைகள்... இனி சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லை
தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் பைகள்... இனி சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லை
பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக். அதை ஒழிப்பதற்கு அரசு மற்றும் பொது நல அமைப்புகள் பெரு முயற்சி எடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத ஒரு பொருள் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பது தான். தற்போது கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் பைகளை கண்டுபிடித்து உள்ளது. பிளாஸ்டிக் பைகள் தண்ணீரில் கரைந்த பின்னர் அந்த தண்ணீரை மண்ணில் ஊற்றினாலும் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பயன்படுத்திய பிறகு கண் முன்னே தண்ணீரில் கரையும் இந்த பிளாஸ்டிக் பைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 23, 2024