கோவையில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறை
கோவையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை முழுவதும் சராசரியாக 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஓரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குடிநீர் பிரச்னைக்கு மற்றொரு முக்கிய காரணம் மழைநீரை முறையாக சேகரிக்காதது தான் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர கோவை நகருக்குள் உள்ள குளங்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதும் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய குறைகளை நீக்கி குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 15, 2024