உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விரைவாக நிறைவேற்ற போராட்டக் குழு எதிர்பார்ப்பு | What is Athikadavu Avinasi Project?

விரைவாக நிறைவேற்ற போராட்டக் குழு எதிர்பார்ப்பு | What is Athikadavu Avinasi Project?

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவு பெற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப் போராட்டக் குழுவினர் கூறுகையில், பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு திட்டம் செயல்பாடுக்கு வரவுள்ளது. நீலகிரி, மாயாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை, பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. திட்டத்தின் கீழ் ஆறு மோட்டார் வாயிலாக நீர்செறிவூட்டப்பட வேண்டிய நிலையில், மூன்று மோட்டார் இயக்கும் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில மாதம் வெள்ளோட்டப்பணி எதுவும் பார்க்காததால், ஆங்காங்கே குழாய் உடைப்பு, நீர் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் மழை நீடித்தால் வெள்ளோட்டம் பார்க்கும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 பிப்ரவரி 19ல் இத்திட்டம் தொடர்பாக அரசாணை வெளியான நிலையில் செயல்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது. விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டப்பணியை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என போராட்ட குழுவினர் கூறினர்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை