/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சூழலை பாதிக்காத விவசாய கழிவுகள் | மறுசுழற்சியில் தயாராகும் டம்ளர்கள்
சூழலை பாதிக்காத விவசாய கழிவுகள் | மறுசுழற்சியில் தயாராகும் டம்ளர்கள்
கரும்பு சக்கை, நெல் உமி, தவிடு, கடலை தோல், புளியங்கொட்டை உள்ளிட்ட விவசாய கழிவுகளில் இருந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தட்டு, டம்ளர் போன்ற பொருட்களை கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இந்த பொருட்களை நாம் பயன்படுத்தலாம். விவசாய கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தட்டு, டம்ளர் போன்றவற்றை பூமியில் வீசினாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அவற்றை கால்நடைகள் தின்றாலும் அவற்றிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. விவசாய கழிவுகளில் இருந்து சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் தயாரிப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 06, 2025