/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ குள்ளஞ்சாவடியில் 4 பேர் கைது | Four arrested for hurling petrol bomb at panchayat office
குள்ளஞ்சாவடியில் 4 பேர் கைது | Four arrested for hurling petrol bomb at panchayat office
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு அம்பேத்கர் சிலை உள்ளது. செவ்வாய் இரவு மர்ம ஆசாமிகள் 4 பேர் போதையில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு ஊராட்சி அலுவலக சுவற்றில் விழுந்து வெடித்தது. மக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து மர்ம ஆசாமிகள் தப்பி ஓடினர். குள்ளஞ்சாவடி போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த வெற்றி, கிருஷ்ணகுமார், சதீஷ் மற்றும் விஜயராஜ் ஆகியோரை கைது செய்தனர். போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறினர். விசாரடைண நடக்கிறது.
ஏப் 24, 2024