300 க்கும் மேற்பட்ட வள்ளலார் பக்தர்கள் கைது|Protest|Vadalur
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இதன் வளாகத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என அரசு அறிவித்து கட்டுமானப் பணிகளை துவக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் உள்ள வள்ளலார் பக்தர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக வடலூர் 4 முனை சந்திப்பில் வள்ளலார் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஏப் 10, 2024