உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / அவதார் சினிமா பாணியில் ஆற்றை கடக்கும் அவலம் | Dharmapuri | permanent bridging

அவதார் சினிமா பாணியில் ஆற்றை கடக்கும் அவலம் | Dharmapuri | permanent bridging

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வாணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கத்திரிப்பட்டி பகுதி மக்கள் ஆற்றை கடந்து வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். பால் உற்பத்தியாளர்கள் கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பால் வியாபாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மரத்தில் அவதார் சினிமா பாணியில் ஆதிகாலதது மக்கள் நடந்து செல்வது போல் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதேல்லாம் இதே நிலை தான். மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்வாதாரம் கருதி வாணாபுரம் ஆற்றின் குறுக்கே சிறு பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை