பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்| Theerthamalai temple car festival| Masi Magam| Dharmapuri
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்/ Theerthamalai temple car festival/ Masi Magam/ Dharmapuri தர்மபுரி தீர்த்தமலை கோயிலில் மாசி மகம் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பூலோகத்தில் பெருமாள் ராம அவதாரம் எடுத்து ராவணனை வதம் செய்த பாவம் நீங்க தீர்த்தமலை கோயிலில் இரண்டாம் கால பூஜை செய்தார். சிவ பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை ராமபிரான் அம்பு எய்தி உருவாக்கியதால் இது தீர்த்தமலை என பெயர் பெற்றதாக ஐதீகம். கோயிலின் மாசி மகம் உற்சவம் மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் வடிவாம்பிகை சமேத தீர்த்தகிரீஸ்வரர் தேரில் பிரவேசித்தார். பக்தர்கள் சிவசிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.