/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ 15 கடைகளுக்கு அபராதம் | banned plastic bags seized in kodikanal shops
15 கடைகளுக்கு அபராதம் | banned plastic bags seized in kodikanal shops
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடை விதித்துள்ளது. இருப்பினும் சில கடைகளில் மறைமுகமாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இதனை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் கொடைக்கானல் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனைகள் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ 30,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
நவ 15, 2024