உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ப்ளஸ் 2விற்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என தெளிவு பெற்ற மாணவர்கள்

ப்ளஸ் 2விற்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என தெளிவு பெற்ற மாணவர்கள்

ப்ளஸ் 2விற்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என தெளிவு பெற்ற மாணவர்கள் / Dinamalar Vazhikatti - 2025 / PVK Mahal / Dindigul ப்ளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே. மகாலில் இன்று கோலாகலமாக துவங்கியது. இந்நிகழ்ச்சி நாளை நிறைவடைகிறது. அனுமதி இலவசம். ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால நலன் கருதி உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டிற்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றும், நாளையும் திண்டுக்கள் பி.வி.கே. மகாலில் நடக்கிறது. நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி டீன் விஜய சாமுண்டீஸ்வரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வழிகாட்டி நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகளை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி டீன் விஜய சாமுண்டீஸ்வரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சித்ரா, கற்பகம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன், மாணவியர் மிருதுளா வர்ஷினி, விவாகா திறந்து வைத்தனர். கருத்தரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் நாற்றுக்கணக்கான அரிதான படிப்புகள் தொடர்பாக கல்வி நிபுணர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். இன்று காலை மற்றும் மாலையில் நடந்த கல்விக் கருத்தரங்கில் கலை, அறிவியல் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன். நீட், ஜெ.இ.இ. பற்றி கல்வி ஆலோசகர் அஸ்வின், அனைவருக்கும் ஐ.ஐ.டி. பற்றி சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் டாக்டர் காமகோடி. மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் பற்றி SLCS கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார், மீடியா அனிமேஷன் பற்றி SLCS கல்லுாரி பேராசிரியர் கிேஷார் குமார். சி.ஏ. வணிக படிப்புகள் குறித்து ஆடிட்டர் அருண் ICAI, விஞ்ஞானி ஆக வழி பற்றி டாக்டர் டில்லி பாபு DRDO விஞ்ஞானி, இன்ஜினீயரிங் துறையின் எதிர்காலம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி. கடல்சார் படிப்புகள் பற்றி கேப்டன் கப்ரியல் பூபாலராயன், தொழிலக பாதுகாப்பு படிப்புகள் குறித்து SLCS கல்லுாரி பேராசிரியர் விவேக் ராம்குமார். CA வணிக படிப்புகள் பற்றி ஆடிட்டர் அபிேஷக் மற்றும் உயர் கல்வி பற்றி IFS அதிகாரி சுதா உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். நாளைய நிறைவு நாள் கருத்தரங்கில் இன்ஜினீயரிங் படிப்புகள் பற்றி பேராசிரியர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி டீன் விஜய சாமுண்டீஸ்வரி, உயர் கல்வி பற்றி IFS அதிகாரி சுதா, ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பற்றி பேராசிரியர் டேவிட் ரத்தினராஜ், வணிக மேலாண்மை பற்றி பேராசிரியர் பத்மாவதி, சைபர் பாதுகாப்பு படிப்பு குறித்து பேராசிரியர் தினேஷ், ஐ.டி. துறையின் எதிர்காலம் குறித்து அமிர்தா விஷ்வ வித்யா பீடம் சிதானந்த மிர்தா சைதன்யா பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைகள். கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றின் வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகள், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளை தேடி பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம். நிகழ்ச்சியை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டியூஷன்ஸ், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் வழங்கியது. மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி. கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சாப்ட்வேர் அக்கவுன்ட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. கல்வியாளர்களின் நேரடி ஆலோசனைகளை பெற நாளை இறுதி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் மிஸ் பண்ணிட வேண்டாம். அனுமதி இலவசம். வழிகாட்டி கல்வி நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலளிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், ஸ்மார்ச் வாட்ச், டேப் உள்ளிட்ட பரிசு பொருட்கள் காத்திருக்கிறது.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !