/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ 3 கிலோ கஞ்சா, 300 கிராம் போதை காளான் சிக்கியது | Kodaikanal crime
3 கிலோ கஞ்சா, 300 கிராம் போதை காளான் சிக்கியது | Kodaikanal crime
கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் டிஎஸ்பி மதுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ முத்துக்குமார் மற்றும் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தங்கும் விடுதிகளில் ரெய்டு நடத்தினர். இதில் போதை காளான் விற்பனை செய்ததாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் போதை காளான் மற்றும் 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
ஆக 17, 2024