/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை வழங்காத மத்திய அரசு: வைகோ குற்றச்சாட்டு | Dindigul
தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை வழங்காத மத்திய அரசு: வைகோ குற்றச்சாட்டு | Dindigul
திண்டுக்கல் மணிக்கூண்டில் மக்கள் நல கூட்டணி சார்பில் கடந்த 2016 ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 12 பேர் மீது தேர்தல் நன்னடத்தையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. வழக்கு விசாரணைக்காக இன்று மாஜிஸ்திரேட் சௌமியா மேத்யூ முன்பு வைகோ ஆஜரானார். வழக்கு தொடர்பாக வைகோவிடம் மாஜிஸ்திரேட் விளக்கம் கேட்டார். அவரது விளக்கம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
ஜன 20, 2025