400 குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு| kids marathon competition| Erode
ஈரோடு திருச்செங்கோட்டில் மாநில அளவிலான கிட்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்றது. குழந்தைகளுக்கான மரத்தான் போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது இரண்டு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 மீட்டர், 6 முதல் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு தனிப்பிரிவுகளாக இரண்டு கிலோமீட்டரில் போட்டிகள் நடத்தப்பட்டது மாரத்தான் போட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூபாய் 3000 இரண்டாம் பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. மேலும் முதல் ஐந்து இடங்களை வென்ற குழந்தைகளுக்கு மெடல், ஷீல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை ஜி குளோபல் பள்ளி, யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து செய்தனர்
ஜன 19, 2025