/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய மன நோயாளி | Kanniyakumari | Driver conductor Suspended
டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய மன நோயாளி | Kanniyakumari | Driver conductor Suspended
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை முடியாம்பாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மனநலம் பாதிக்கப்பட்டவர். குலசேகரம் டு மார்த்தாண்டம் பஸ்சில் ஆற்றுார் பகுதியில் இருந்து அரசு பஸ்சில் பயணித்தார். மணிகண்டனிடம் கண்டக்டர் காந்தி டிக்கெட்டுக்கு பணம் கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தியை மணிகண்டன் தாக்கினார். அதைப் பார்த்த பயணிகள் மற்றும் டிவைரவர் பதமகுமார் ஆகியோர் மணிகண்டனை தாக்கினர். இதை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். கன்னியாகுமாரி போலீசார் விசாரித்தனர். பஸ்சில் மனநோயாளியை தாக்கிய கண்டக்டர் காந்தி, டிரைவர் பதமகுமார் இருவரையும் போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட் செய்தது.
ஜன 05, 2024