/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Karur Ekambari Iswari Amman Temple Kumbabhishakam
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Karur Ekambari Iswari Amman Temple Kumbabhishakam
கரூர் மாவட்டம் குளித்தலையில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஏகாம்பரி ஈஸ்வரி, ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய பழைமையான கோயில் உள்ளது. கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் 4 ம் கால யாகசாலை பூஜைக்கு பின் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடானது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. திராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூன் 10, 2024