உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்| Varahi panchami abishegam| karur

16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்| Varahi panchami abishegam| karur

16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்/ Varahi panchami abishegam/ karur கரூர் மினி பஸ் ஸ்டாண்ட் வாராஹி அம்மன் கோயிலில் மாசி வளர்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சந்தனாதி தைலம், மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் பன்னீர் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிவாச்சாரியார்கள் சத நாமாவளி அர்ச்சனை செய்தனர். பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவாச்சாரியார் கார்த்தி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்தனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ