/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலால் ஆத்திரம் | Krishnagiri | People who blocked the MP car
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலால் ஆத்திரம் | Krishnagiri | People who blocked the MP car
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் சென்னானூர் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் செயல்படுகிறது. டாஸ்மாக்கிற்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு தொல்லை, அடிக்கடி விபத்து, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். டாஸ்மாக்கை மாற்ற கோரி மனு கொடுத்தும் பயனில்லை. பொது மக்கள் 30 க்கும் மேற்பட்டோர் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக வந்த கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் காரை குன்னத்தூர்-ஆதாலியூர் ரோட்டில் அமர்ந்து மறித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கை மனுவை கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
பிப் 22, 2024