/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஆபீஸ் மற்றும் வீட்டில் ₹ 3.66 லட்சம் சிக்கியது Anti bribery police raid at sub registered office
ஆபீஸ் மற்றும் வீட்டில் ₹ 3.66 லட்சம் சிக்கியது Anti bribery police raid at sub registered office
தஞ்சாவூரை சேர்ந்தவர் அருள்முருகன் வயது 54. இவர் மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக உள்ளார். இங்கு லஞ்சம் கோரத் தாண்டவம் ஆடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சிங்காரவேலன் ஆகியோர் நேற்று கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தினர்.
மே 31, 2024