/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஒதுக்கீடு தொகை கடந்தாண்டை விட ₹.300 கோடி குறைவு | Burning budget copies
ஒதுக்கீடு தொகை கடந்தாண்டை விட ₹.300 கோடி குறைவு | Burning budget copies
மத்திய பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 300 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது. இதைக் கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் ரமேஸ்வரி, செல்வி, சுகுணா, கவிதா, சி.ஐ.டி.யு. மாநில பொருளாளர் தெய்வராஜ், மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிப் 05, 2024