/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பஸ் ஸ்டாப்களில் புகுந்து பயணிகளை அள்ளும் ஷேர் ஆட்டோக்கள் | Madurai | Share Auto issue
பஸ் ஸ்டாப்களில் புகுந்து பயணிகளை அள்ளும் ஷேர் ஆட்டோக்கள் | Madurai | Share Auto issue
மதுரை ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், குரு தியேட்டர் ஸ்டாப்புகளில் வாடிப்பட்டி, அலங்காநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோக்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ் வரும் போது பஸ் ஸ்டாப்பில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி கொள்வதால் மக்கள் பஸ்களில் ஏற முடியாத நிலை ஏற்படுகிறது. பஸ்சில் செல்லும் பயணிகளை மறித்து ேஷர் ஆட்டோ டிரைவர்கள் தொல்லை கொடுக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ேஷர் ஆட்டோவில் செல்லும் அவல நிலை உள்ளது. விபத்து ஆபாயமும் நிலவுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
ஜன 04, 2024