அருந்ததியர் குடியிருப்புக்குள் புகுந்து கும்பல் அட்டகாசம் | Garbage truck fire | 5 people arrested
குப்பை வண்டிக்கு ‛தீ வைப்பு டூவீலர்களை நொறுக்கிய கும்பல் டிஸ்க்: அருந்ததியர் குடியிருப்புக்குள் புகுந்து கும்பல் அட்டகாசம் / Garbage truck fire / 5 people arrested / Madurai மதுரை ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரம் உள்ளது. அருந்ததியர் வசிக்கும் இப்பகுதியில் கடந்த மார்ச் 31ம் தேதி நள்ளிரவு புகுந்த அடையாளம் தெரிந்த ஐந்து பேர் குப்பை வண்டிக்கு தீ வைத்தது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்களை அடித்து நொறுக்கினர். தட்டிக்கேட்ட அருந்ததியர் இளைஞர்களிடம் ‛அப்படித்தான் உடைப்போம் எனக் கூறி விட்டு அசால்ட்டாக சென்றனர். இவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பாதிக்கப்பட்டோர் ஒத்தக்கடை போலீசில் புகார் கூறினர். விசாரணை நடத்திய போலீசார் ஐவர் கும்பலை கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி கலெக்டரிடம் மனு அளித்தனர்.