75ஆடுகள், 50 கோழிகள் பலியிட்டுநேர்த்திக்கடன்| Karaikudi |For unity of relations Masi PodayalFestival
75 ஆடுகள், 50 கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் / Karaikudi / For unity of relations Masi Podayal Festival சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.வேலங்குடி 18ம் படி கருப்பர், மூட்டாவூரணி காளியம்மன் கோயிலில் உறவுகள் ஒற்றுமைக்காக 30 ம் ஆண்டு மாசி படையல் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. மாசிமகத்தன்று கிராமத்தினர் சந்தனக்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். படையல் விழாவை முன்னிட்டு வேலங்குடியில் பிறந்து வெளியூர்களுக்கு திருமணமாகி சென்ற பெண்கள், கோயிலுக்கு நேர்த்திக்கடனாக கொண்டு வந்த 75 ஆடுகள், 50 கோழிகள் பலியிட்டு கருப்பர், காளியம்மனுக்கு படையலிட்டு தரிசனம் செய்தனர். உறவுகள் ஒற்றுமைக்காக நடைபெற்ற விழாவில் 5000 பேருக்கு அசைவ விருந்து நடைபெற்றது.