மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு பட்டு சால்வை அனுப்பி வாழ்த்து
மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு பட்டு சால்வை அனுப்பி வாழ்த்து | Madurai | Madurai Corporation ranks first on the list of the dirtiest municipalities 2025 ம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் ஸ்வச் சர்வெக் ஷன் (Swachh Survekshan) வெளியிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி முதல் இடத்தையும், லூதியானா 2ம் இடத்தையும், சென்னை 3ம் இடத்தை பெற்றுள்ளது. வரி முறைகேடு, மேயர், மண்டலத்தலைவர்கள் ராஜினாமா என பல்வேறு பிரச்சனைகளால் சிக்கியுள்ள நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இந்தியாவிலேயே தூய்மையற்ற துர்நாற்றம் மிகுந்த மாநகரமாக மதுரை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுரை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் நூதன முறையில் மதுரை செல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு வாழ்த்து மடலையும், பட்டு சால்வையும் தபால் மூலமாக அனுப்பிவைத்தார். பைட்: சங்கரபாண்டியன் சமூக ஆர்வலர், செல்லுார், மதுரை