/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் கோபுர கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு பூஜை| |Madurai
ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் கோபுர கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு பூஜை| |Madurai
மதுரை காமராஜர் சாலையில் ஸ்ரீவால்கோட்டை ஆஞ்சநேயர் கோபுர கோயில் உள்ளது. இக்கோயில் சௌராஷ்ட்ரா சபைக்கு பாத்தியப்பட்டது. புராட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்ட சுவாமி சன்னதி முன்பு சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு புளியோதரை, தயிர் சாதம், பொங்கல் மற்றும் உலர் திராட்சை, பல வகைகள் பட்சணங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, துளசி மாலை அணிவித்து திருப்பவாடை எனும் அன்ன பிரசாதத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
செப் 28, 2024