உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / குலவை போட்டு கும்மி அடித்து இனிப்பு வழங்கினர் | tungsten mine issue | Madurai

குலவை போட்டு கும்மி அடித்து இனிப்பு வழங்கினர் | tungsten mine issue | Madurai

மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. 1957ல் இயற்றப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு ஒழுங்குமுறை சட்டத்தை 2023 இல் மத்திய அரசு திருத்தம் செய்தது கனிம சுரங்கங்களின் குத்தகை மற்றும் கூட்டு உரிமைங்களை ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசு கட்டுப்பாட்டிற்கு சென்றது தமிழகத்தின் முக்கிய கனிம தொகுதிகளை ஏலம் விடுவது சார்பாக 2023 செப்டம்பரில் மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது பதில் எழுதிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஏலம் விடும் உரிமையை தமிழக அரசுக்கு கொடுக்குமாறு கூறினார் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் டங்ஸ்டன் சுரங்க பணிகளை மத்திய அரசு தொடர்ந்தது. 2024 நவம்பர் மாதம் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் ஏல உரிமையை கைப்பற்றியது டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அரிட்டாப்பட்டி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர் இந்நிலையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழு மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் அரிட்டாப்பட்டி விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இன்று டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதை கொண்டாடும் வகையில் அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். பெண்கள் குலவை போட்டு கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை