உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது | Launched Students Satellite

விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது | Launched Students Satellite

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மற்றும் சென்னை கோலா சரஸ்வதி பள்ளி மாணவர்கள் இணைந்து 2 கிலோ எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்கினர். மத்திய பாதுகாப்பு துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அனுமதி பெற்று பள்ளி வளாகத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் ஹீலியம் பலூன் மூலம் இந்த சிறிய வகை செயற்கைக்கோள் பாராசூட்டில் கட்டி ஒரு லட்சம் அடி உயரத்திற்கு விண்ணில் ஏவி நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைக்கோள் சுமார் 8 மணி நேரம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு தட்பவெட்பம் , வாயு அழுத்தம், காற்றின் மாறுபாடு வளிமண்டல மாறுபாடு, போன்ற தரவுகளை பதிவு செய்யும். நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், பள்ளி செயலர் ஜான்சன், தாளாளர், பள்ளி முதல்வர் பங்கேற்றனர்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ