/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பொன்னானி மகாவிஷ்ணு கோயிலில் ஆடி அமாவாசை தர்ப்பணம் | Audi 18 Puja | Pandalur
பொன்னானி மகாவிஷ்ணு கோயிலில் ஆடி அமாவாசை தர்ப்பணம் | Audi 18 Puja | Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு துவங்கிய பூஜையில் பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கோயில் ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நிகழ்ச்சியை கோயில் மேல் சாந்தி சதீஷ்குமார், அர்ச்சகர் உமா சங்கர், மேலாளர் சந்தியா தலைமையிலான குழுவினர் செய்தனர். சேவ் நீலகிரி அமைப்பு சார்பில் உன்னிகிருஷ்ணன் தலைமையில் பக்தர்களுக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
ஆக 03, 2024