/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவு |Election officer raid
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவு |Election officer raid
கேரள - தமிழக எல்லை பகுதியாக உள்ளது நீலகிரி மாவட்டம் பந்தலூர். இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் கௌஷிக் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு சில ஓட்டுச்சாவடி மையங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாததுடன், வாக்காளர்களுக்கு போதிய கழிவறை வசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லாதது தெரிய வந்தது. இவற்றை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து எல்லையில் உள்ள நம்பியார்குன்னு மற்றும் பாட்டவயல் செக்போஸ்ட்டுகளில் வாகன தணிக்கை மேற்கொண்டதுடன் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மார் 24, 2024