/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தேவாலா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழை கொட்டியது| Heavy Rain |Pandalur
தேவாலா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழை கொட்டியது| Heavy Rain |Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் தேவாலா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் பொன்னானி மற்றும் சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதில் பாலாவயல், மணல்வயல், வட்டக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
ஜூன் 26, 2024