திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabhishekam | coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை பகுதியில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. தொடர்ந்து கும்பாபிேஷக யாக சாலை பூஜைகள் கடந்த 13ம் தேதி கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் துவங்கியது. இன்று காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன் கடம் புறப்பாடு நடபெற்றது. காலை 10.55 மணிக்கு விமான கலசங்களில் புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும், மஹா சக்தி செல்லாண்டியம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அம்பாளுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் சிறுவர் சிறுமியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்தனர். 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.