/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நெல்லியாலம் நகராட்சி ஆணையர் முனியப்பன் எச்சரிக்கை | Municipality Warning | Nellialam
நெல்லியாலம் நகராட்சி ஆணையர் முனியப்பன் எச்சரிக்கை | Municipality Warning | Nellialam
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜார் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை சாலைகள் மற்றும் கடைவீதிகளில் மேய விடுகின்றனர். இதனால் பாதசாரிகள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் இரவு நேரங்களில் மாடுகள் ஓய்வு எடுப்பதால் மாட்டு தொழுவங்களாக மாறி வருகிறது. கால்நடைகளை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லியாலம் நகராட்சி ஊழியர்கள் பஜார், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதிகளில் மேயும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.
ஆக 31, 2024