/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ திருட வந்த வீட்டில் மாட்டிக்கிட்ட கொள்ளையன் நாடகமாடி எஸ்கேப் | the thief ran away | pandalur
திருட வந்த வீட்டில் மாட்டிக்கிட்ட கொள்ளையன் நாடகமாடி எஸ்கேப் | the thief ran away | pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாமிமுத்து வயது 86. அவரது மனைவி லட்சுமி வயது 75. இவர்களது மகன் மற்றும் மகள் இலங்கையில் இருப்பதால் தம்பதி மட்டுமே தனியாக வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டது. அருகில் உள்ளவர்கள் முன்பக்க கதவை திறந்து கொண்டு பார்க்கும்போது உள்ளே ஒருவர் சாமிமுத்துவின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்றனர். சம்பவத்தை வீடியோ எடுக்க முயற்சி செய்யும்போது, முதியவரை காப்பாற்றுவது போல அந்த ஆசாமி நடித்துள்ளார்.
அக் 27, 2024