78 வது காலாட்படை தினம் | Infantry day | coonoor
கடந்த 1947 அக்டோபர் 27ம் தேதி காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் நுழைந்த எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் இந்த வீர செயலை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவம் சார்பில் காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காலாட்படையினருக்கு பயிற்சி அளித்து வரும் நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ராணுவ மையத்தில் 78வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராணுவ பேண்ட் வாத்திய இசை முழங்க ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். அதைத் தொடர்ந்து போர் நினைவு தூண் சதுக்கத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெஃப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலியுடன் மரியாதை செலுத்தினார்.